திங்கள், செப்டம்பர் 03, 2012

மின்தடை...




விவாதம் ஏதுமின்றி;
விதியோ, வினையோ;
என்றகேள்வி தேவையின்றி;
எல்லோரின் சகிப்புதன்மையையும்;
தற்போது தகர்க்கும்;
"தானே"புயல் - மின்தடை!

மின்சாரத்தின் "இருப்பை"யரிய
மின்விளக்கு போட்டுப்பார்த்த
காலம்போய் - சுழன்ற;
காற்றாடி நின்றதும்!
தன்னிச்சையாய், உணர்வது!!
தற்போதைய வாழ்க்கையன்றோ?

அகவை பதினாறில்(எனக்கு);
அறிமுகமான தொலைக்காட்சி!
எம்மகளுக்கு மட்டும்;
எப்படி(யோ) பிறந்த
பதினாறு நிமிடங்களுக்குள்
பதிவில் விழுந்தது???

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும்
வளர்ந்தது கண்டு;
பெருமைப்படுவதா? இல்லையென் -
பாரம்பரியம் மறந்து;
வாழ்வியல் தொலைந்ததற்காய்;
விசனப் படுவதா??

எதுவும் நிரந்தமரில்லை
என்ற; "கீதை"
கொடுத்த உபதேசம்
கொண்டிருந்த என்னினம்!
மின்சாரமும் நிரந்தரமில்லையெனும்
மெய்மையை மறந்த-தேனோ?

நமக்கு உதவிட;
நம்மால் தோன்றிட்ட -
ஒன்றின்று; நம்மையே
ஒடுக்கி - அடிமையாய்
ஆக்கிட்ட விந்தைக்கு
எவரை காரணமென்பது?

விசிறி-மட்டை முதல்,
விறகு-அடுப்பு தொடந்து;
ஆட்டுக்-கல் வரை;
அனைத்து மாற்றையும்
அறவே ஒழித்தது
அனைவரின் குற்றமன்றோ??

இக்கவியை எளிதாய்,
இணையதளத்தில் வெளியிடினும்;
இதற்கு மாற்றான
எழுதும் கலையைகூட
வருங்கால சந்ததியர்
வேரறுத்து விடுவரோ?

மின்சாரமெனும் - விஞ்ஞானத்தின்
மெய்-ஞானம்; உணர
மறுத்ததேன்? விஞ்ஞானமும்
மெய்ஞானமும்; வாழ்கையை -
வழிநடத்திட உதவட்டும்!
வெறுமையாக்கிட வேண்டாம்!!

கணக்கேட்டிற்கு கணினி;
கூத்துக்கு தொலைகாட்சி;
கடிதத்திற்கு மின்னஞ்சல்;
கோடி மாற்றுகள்-வரினும்!
ஆணி-வேறாய் இருப்பது;
அடிப்படை மட்டுமே!!

அடிப்படை தொடராத,
அதிசயங்கள் எப்போதும்;
வேரூன்றியதும் இல்லை!
வென்றதும் இல்லை!!
அடிப்படை தொடர்ந்திடின்;
அத்தனை-தடைகளையும் கடந்திடலாம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக