திங்கள், ஆகஸ்ட் 27, 2012

மொழி - ஒற்றுமையா? வேற்றுமையா??



மொழி…
மனிதனும், மிருகமும்
உணர்வைப் பகிர்வதற்காய்
உருவான "வழி"!
மொழி; மிருகத்திற்கு -
மிதமான உணர்வாயிருக்கையில்;
மனிதனுக்கு மட்டுமேன்,
மமதையாய் மாறிற்று?

மொழியின் மாற்றம் -
மனிதனின் உணர்வை;
சரிவர பரிமாற்றம் -
செய்யாததன் விளைவோ!
மாநிலமும், நாடுகளும்?
மமதையான உணர்வு;
உலகையே சிதைக்குமெனின் -
உயிர்மொழி விதிவிலக்காயென்ன??

இதர நாடுகளுக்கெல்லாம்
இம்மொழியானது; புரிதலில்(மட்டும்)
தொல்லையாய் இருக்கும்போது -
"எல்லையாய்"; இந்தியனுக்கு
மட்டுமேன், மாறிப்போனது?
மொழிகள் பலவென்பதாலா??
மொழியுணர்வு வேறென்பதாலா???
மொழிமட்டுமே காரணமா!

இல்லையென்று கூச்சலிட்டு,
இறுதியாய் கதறிட்டு;
இயம்பிட தோன்றுகிறது!
இந்தியாவில் தானே;
இம்மொழி வேறுபாடு?
இலங்கைத் தமிழன்;
இனிதாய் பேசுவது -
இலக்கணத் தமிழ்தானே??

இருந்துமேன், என(நம)க்கு;
இனவுணர்வு வரவில்லை?
நாடு வேறென்பதாலா??
நா(ந)ட்டமில்லை என்பதாலா???
மொழியென்பது; ஏனின்னும்;
மனிதத்தை மட்டுமாவது -
இணைக்கவில்லை? பின்னெப்படி
இதர-கண்டங்களை இணைக்கும்??

ஓரிடத்தில் மொழியே;
ஒற்றுமையை ஒழிக்கிரதென்று!
ஓங்காரமிடும் - தமிழா!!
ஓலமிட்டு அழுதும்;
ஒன்றிட்ட மொழியிருந்தும்;
ஒன்றுபட்டு ஏனின்னும்!
ஒழிப்பவர்களை ஒடுக்க;
ஒற்றுமையோடு எழவில்லை?

வேற்று நாட்டவனென்று;
வேறுபட்டு நிற்கிறாயோ?
இருப்பின், மொழியெனும்;
இடரகற்றி - இந்தியனெனும்!
உணர்வேணும் கொள்;
உலகின் மூத்தவினம் -
தமிழினத்தின் வீர(ப்பாரம்பரிய)த்தை;
தரம்தாழ்த்தி விடாதே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக