ஞாயிறு, ஜூன் 17, 2012

தெளிவுகொள் தமிழா...




தமிழை தவறின்றி
தெளிவாய்; பேசத்
தெரியாததை - தெம்பாய்; 
தம்பட்டம் அடித்து
திரியும் தமிழா!!!
தெளிவு ஏனில்லை,
தெளிந்திட வழியென்னவென;
தெரிந்திட முயல்வோமா?

ஊதியத்திற்கும், உயர்விற்கும்
ஊறு விளைவிக்கிறது -
என்பதற்காய்; சிரமம்
எத்தனையாயினும், சகலரும்
உன்னை இகழ்ந்தபோதும்;
ன்தாய் மொழிமறந்து,
அறவே தமிழ்கலவாத
ஆங்கிலத்தில் பேசுகிறாயே!

தாய்மொழி தமிழில்(மட்டும்)
தடுமாறி பேசுவதேன்?
தடுமாற்றம் தவறென;
தெரியாது இருப்பதேன்??
தெரிந்தது பலவாயினும்;
தாய்மொழியில் தான்
சிந்தனை வருமென்ற
சித்தாந்தம் மறந்ததேன்??

சிந்திப்பதே உந்தன்
செந்தமிழ் தாய்மொழியில்;
வந்திப்பது எவரெதுவாயினும்!
வார்த்தை தெரியாதென்பது;
எங்கனம் சாத்தியம்?
எங்கேயிதில் சத்தியம்??
பொய்யை மறைக்க;
பொய்மேல் பொய்யோ???

தெளிவுகொள் தமிழா...
தமிழும், தமிழுணர்வும்;
நிர்ப்பந்தத்தால் வருவதல்ல;
நின்பந்தத்தால் விளைவதென!
எந்த தேசத்தில்
எப்படியிருப்பினும்; உந்தன்
உயிரென!! உயிருடன்;
உணர்வும் கலந்ததென!

தெளிவுகொள் தமிழா…
தெளிவாய் எவன்மொழியோ
பேசும், உன்னால்;
பரணியெங்கும் பரந்த!
மொழியனைத்திலும் சிறந்த!!
மெய்(தாய்)மொழியாம் - தமிழில்;
இலக்கியம்சேர் கவிகூட
இயற்றிட கூடுமென்று!!

தெளிவுகொள் தமிழா…
தாய்மொழி கூட;
தானாய் அமைந்திட்ட
தாய்-தந்தை போலவென்று!
பெற்றோரிடம் பிணைப்பு;
பிறப்பிலேயே வருவது!!
ஆங்கே; தமிழு(ணர்வு)ம்
அதுவாய் வந்திடல்வேண்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக