வெள்ளி, டிசம்பர் 16, 2011

ஏன் பின்னோக்கிய பயணம்?


அகந்தையால் - (பேர்)அழகால்
ஆணவத்தால் - (அரசு)ஆட்சியால்
இனத்தால் - (சாதி)சனத்தால்
உறவால் - (உள்)உணர்வால்
எழிலால் - (பல)எல்லையால்
நிலத்தால் - (மெய்)நிறத்தால்
பணத்தால் - (படை)பலத்தால்
பெண்ணால் - (பசும்)பொன்னால்
மதத்தால் - (மமதை)மனிதனால்
மொழியால் - (பெரும்)மடமையால்
நடந்தது கடந்து
உப்பாகப் போகும்
"தண்ணீரை"ப் பகிர்வதில்
இன்றைய அரசியல்!


இதுதானா வேற்றுமையில்
இந்தியா கண்டிட்ட
பொதுமை? பயணிப்பது
பின்னோக்கிய பாதையிலோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக